ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர்களைக் கொல்ல துணிந்த இஸ்ரேல்! காப்பாற்றிய அமெரிக்கா
ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடங்கிய நுட்பமான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது, பேச்சுவார்த்தையாளர்களான முகமது பாகர் காலிபாஃப் மற்றும் அப்பாஸ் அராக்சி ஆகியோரைக் கொலை செய்ய இஸ்ரேல் சதித்திட்டம் தீட்டிய விடயம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்நிலையில் ஈரானை எச்சரிக்குமாறு, மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஊடகங்களின் அறிக்கையின்படி, ஈரானின் வெளியுறவு அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகரைக் கொல்ல இஸ்ரேல் மேற்கொள்ளும் முயற்சி, ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாழாக்கி, வளைகுடாப் பிராந்தியத்தில் மீண்டும் சண்டைகள் வெடிக்க வழிவகுக்கும் என்று அமெரிக்கா கவலை கொண்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் வியூகம்
பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்தே, ஈரானின் மூத்த தலைவர்களைக் கொல்வது இஸ்ரேலின் வியூகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது.

இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவரும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான அலி கமேனி முதல், உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளரான அலி லாரிஜானி வரை, சமீபத்திய ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட ஈரானியத் தலைவர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், அமெரிக்க ஊடக அறிக்கையின்படி, போரின் தீவிரமான காலகட்டத்தில், ஈரானின் கடும்போக்கு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் முனைப்புடன் இருந்த இஸ்ரேலுக்கு, அராக்சியும் காலிபாஃபும் நியாயமான இலக்குகளாக இருந்திருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்பியதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு குறிப்பிட்ட ஈரானிய அதிகாரிகளை இஸ்ரேல் படுகொலை செய்தால், ஈரானில் அமைதியை நோக்கிய எந்தவொரு முயற்சியும் தடம்புரண்டுவிடும் என்று அவர்கள் அஞ்சிதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதையும், தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தொடர் பேச்சுவார்த்தைகளுக்கான கட்டமைப்பை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் எட்டுவதற்காக, அராக்சியும் காலிபாஃபும் அப்பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய அதிகாரிகளாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்