அமெரிக்கா - ஈரான் நகர்வை தடம் புரளச் செய்ய திட்டமிடும் இஸ்ரேல்!
தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் அது பிராந்தியத்தை சீர்குலைக்கும் ஒரு புதிய போரைத் தூண்டக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை கத்தாரின் தோஹாவிற்கு விஜயம் செய்து உயர் அதிகாரிகளைச் சந்தித்தபோது ஊடகங்களுக்கு அளித்த கருத்துக்களில் இதனை கூறியுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை
மேலும், புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு நுட்பமான கட்டத்தில் இருந்ததால், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்ய இஸ்ரேல் சாக்குப்போக்குகளை உருவாக்கி வருவதாகக் கூறினார்.
“எங்கள் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுடன் மட்டுமே. நாங்கள் இஸ்ரேலுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.
இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி நாசமாக்கும் நோக்கத்துடன் இஸ்ரேல் இந்த செயல்பாட்டில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது." என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |