ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி: அடுத்தடுத்த நகர்வுகளுக்கு செல்லும் இஸ்ரேல்!
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலை தொடர்ந்து, அதற்கான பதிலடி தொடர்பில் இஸ்ரேல் அமைச்சரவை தற்போது கூட்டம் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இஸ்ரேலின் அடுத்து வரும் பதில் தாக்குதல்களில் தாக்கம் மேலும் அதிகரிக்கப்படும் என அந்நாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல் விவரம்
ஈரான் வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேலை நோக்கி 100-க்கும் குறைவான ஏவுகணைகளை ஏவியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் மண்ணில் விழுந்ததாகவும், பெரும்பாலானவை வழியில் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தகவல்படி, இவை உருவாக்கிய சேதங்களில் சில, தடுக்கப்பட்ட ஏவுகணைகள் உதிரி பாகங்களால் ஏற்பட்டவை என IDF பேச்சாளர் எஃபி டெஃப்ரின் கூறினார்.
பாதிப்புகள்
மேலும் இரவில் மற்றுமொரு ஏவுகணை தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு தங்குமிடங்களுக்கே அருகிலிருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, மொத்தம் 17 பேர் இந்த தாக்குதலால் காயமடைந்துள்ளதாக, இஸ்ரேலின் அவசர சிகிச்சை சேவை தெரிவித்துள்ளதுடன் அதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், டெல் அவீவ் சூராஸ்கி மருத்துவமனை, ஷீபா தெல் ஹாஷோமர் மருத்துவமனை மற்றும் ரபின் மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளும் மொத்தம் 40 பேர் காயமடைந்துள்ளதாக தனித்தனியாக தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
