மத்திய கிழக்கில் சிரியாவை உலுக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு!
இஸ்ரேலால் சிரியாவில் நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள், குறிப்பாக பஃபர் மண்டல ஆக்கிரமிப்பு மற்றும் வான்வழி தாக்குதல்கள், பிராந்தியத்தில் பெரும் சர்ச்சையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இவை சிரியாவின் இறையாண்மையை மீறுவதாகவும், ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிரான மூலோபாய நகர்வாகவும் பார்க்கப்படுகின்றன.
இந்த நிலைமை மத்திய கிழக்கில் மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கலாம்,
குறிப்பாக ஈரான், ஹிஸ்புல்லா, மற்றும் பிற குழுக்களின் பதிலடி தாக்குதல்களால் மோதல்கள் இடம்பெறலாம் என நம்பப்படுகிறது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் அரபு நாடுகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளன. சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் இதை "கடுமையான ஆக்கிரமிப்பு" என்று விமர்சித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் இஸ்ரேல் சிரியாவில் அத்துமீறுவதாகக் கூறப்படும் செயல்கள் குறித்தும் மத்தியக்கிழக்கில் இது எவ்வாறான எதிர்விணைகளை ஆற்றும் என்பதையும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
