இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம்
காசாவின் (Gaza) தெற்கு முனையில், நிவாரண பொருட்கள் வழங்கும் இடம் ஒன்றின் மீது, இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் பலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக, இஸ்ரேல் மாற்று விளக்கத்தை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
படைகளின் எச்சரிக்கை
சந்தேகத்திற்கு இடமான வகையில் பலஸ்தீனியர்கள் நடந்து கொண்டதாகவும், தங்கள் படைகளின் எச்சரிக்கையை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை என்றும் இஸ்ரேல் விமானப்படை விளக்கமளித்துள்ளது.
ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு, இந்த தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் எனவும், இது போர் குற்றம் எனவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
