ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் - அமெரிக்காவுடன் களமிறங்கும் இஸ்ரேலிய உளவுத்துறை: நெதன்யாகு அதிரடி
ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்கு இஸ்ரேல் தனது உளவுத்துறை மற்றும் பிற இரகசிய வழிகள் மூலம் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனைத் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்கள் நிலத்தடிக்குள் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவற்றை முற்றாக அழிப்பதே இந்தப் போரின் நோக்கம் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏவுகணைப் பாகங்கள்
ஈரானின் ஏவுகணைப் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிர்மூலமாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் ஈரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் நெதன்யாகு உரிமை கோரியுள்ளார்.

ஈரானிய மக்கள் தங்கள் விதியைத் தாங்களே தீர்மானிக்கும் சுதந்திரத்தைப் பெறுவதற்கான சூழலை இந்தத் தாக்குதல்கள் உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கான பல அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, எரிபொருள் விலை உயர்வு என்பது தற்காலிகமானது என்றும் விளக்கமளித்துள்ளார்.
இந்தநிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |