தமிழரசு கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Kajinthan
இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றையதினம் (30.12.2025) அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்