இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran Shanakiyan Rasamanickam Local government Election
By Thulsi Mar 09, 2025 02:06 AM GMT
Report

இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthran ) தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் நேற்று (08) மாலை கட்சியின் மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

நாளை வவுனியாவில் கூடவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு

நாளை வவுனியாவில் கூடவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 

இங்கு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளர், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கூட்டம் நடைபெற்றது.

இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு | Itak Party Contest Local Council Elections

இந்த கூட்டத்தில் பிரதானமாக ஒவ்வொரு பிரதேசமாக அலசி ஆராய்ந்து என்ன முறையிலான அணுகு முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வருகின்ற வாரத்திற்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாக தீர்மானித்திருக்கின்றோம்.

ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது வேண்டாம் என்று கூட்டத்தின் போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி முடிவடைந்து விட்டது என்பது தான் என்னுடைய கருத்து. 

அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது

எங்களுடைய கட்சியின் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார். ஆனால் எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு | Itak Party Contest Local Council Elections

ஆகையினால் ஒரு அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம் தமிழரசு கட்சி தனி அணியாக போட்டியிடும் தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்து தான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும்.

அதுதான் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முறைமை ஆகையினால் அதை குறித்து தொடர்ச்சியாக பல கட்சிகளோடும் பேசிக் கொண்டு இருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு ஊடகத்தின் நேர்காணல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பல கருத்துக்களை கூறியிருக்கின்றார் என கூறுகின்றீர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விளக்கங்கள் கூற முடியாது.

சில கருத்துக்கள் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்ஃ சில அத்துமீறல்கள் இடம்பெற்று இருக்கின்றது என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றார். வேறு சில விடயங்களை மூடி மறைத்து இருக்கின்றார். ஆகையினால் ஒட்டுமொத்தமாக அதைக் குறித்து என்னால் கருத்து கூற முடியாது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல்

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற தேர்வு குழு விசாரணை செய்தபோது அதற்கு முன்பாக சாட்சியம் கொடுத்திருந்தார். அதிலும் அவர் அரசாங்கத்தின் தலைவராக அல்லது பிரதம மந்திரியாக நான் என்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியவர்.

இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு | Itak Party Contest Local Council Elections

அன்றும் அந்த நேர்காணலில் அது தொடர்பாக ஒரு இது வார்த்தைகளை அவரது வாயிலிருந்து வந்ததை நான் அவதானித்தேன். ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழு அவர் ஓரம் கட்டப்பட்டிருந்தாலும் கூட அதனை அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்திருக்க வேண்டும் என்கின்ற குறையினை அவர்கள் கண்டிருக்கின்றார்கள் அது நியாயமான ஒரு குறை.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் முற்றும் மாறுபட்ட நிலைமையினையே எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்திக்கு ஒரு அலையோடு மக்கள் வாக்களித்ததை நாங்கள் கண்டோம்.

தமிழ் மக்களது அபிலாசைகள் 

ஆனால் இந்த ஒரு சில மாதங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களது அபிலாசைகள் தொடர்பான விடயங்களில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை ஒரு சறுக்கல் போக்கையே காட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை காணமுடிகின்றது.

இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு | Itak Party Contest Local Council Elections

இதனை மக்களும் நன்றாக அறிந்திருக்கின்றார்கள் அதற்கு மேல் அதிகமாக மத்திய அரசாங்கம் அவர்களிடம் இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் எங்களுடைய ஊர் ஆட்சி உள்ளூர் ஆட்சி எங்களோடு இருக்க வேண்டும் என்பதை எங்களுடைய மக்கள் முனைப்பாக இருக்கின்றார்கள்.

தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. நான் ஏற்கனவே கூறியது போன்று ஒரு கட்சி தனியாக நிர்வாகத்தை ஆட்சி அமைப்பது என்பது சாத்தியப்பாடு குறைவு.

இது தேர்தல் முறைமைலி இருக்கின்ற விடயம். ஆகையினால் தேர்தலில் பிற்பாடு நாங்கள் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து தான் பல இடங்களில் நிர்வாகங்களை அமைக்க வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கின்றது. 

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் நாடாளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்,வட்டாரக்கிளை தலைவர்கள், மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமருக்கு எதிராக வழக்கு: சபையில் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னணி

பிரதமருக்கு எதிராக வழக்கு: சபையில் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024