ஐ.நாவைப் பலவீனப்படுத்தும் அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழரசுக்கட்சி

United Nations Sri Lankan Tamils Jaffna Gajendrakumar Ponnambalam ITAK
By Sathangani Jul 21, 2025 05:23 AM GMT
Report

ஐ.நாவை பலவீனப்படுத்தும், செயற்பாட்டிலும், பொறுப்பு கூறல் செயற்பாட்டை முடக்கவும் இந்த அரசாங்கம் புதிய யுக்திகளை கையாளுகின்ற நிலையில் தமிழரசுக் கட்சியும் அதற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன்வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழில் சோகம் - கால்பந்து விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழில் சோகம் - கால்பந்து விளையாடிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

தமிழினப் படுகொலை

அவர் மேலும் தெரிவிக்கையில், ”தமிழினப் படுகொலைக்கு பொறுப்பு கூற வைப்பது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் , பொது அமைப்புகள் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தோம்.

ஐ.நாவைப் பலவீனப்படுத்தும் அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழரசுக்கட்சி | Itak Support To Govt S Efforts To Weakening The Un

நாம் அழைப்பு விடுத்தவர்களில் தமிழரசுக்கட்சியினர் சமூகமளிக்கவில்லை, ஏனைய கட்சியில் இருந்து அவற்றின் பிரதிநிதிகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இனப்படுகொலைக்கு பொறுப்பு கூற வைத்தல் என்பது ஜெனிவாவுடன் முடக்கப்பட்டு விடக் கூடாது, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அதனை அவ்வாறே விட்டு விட முடியாது. சாட்சியங்களை இழந்து வருகிறோம். இந்த நிலைமை தொடருமாயின் பொறுக்கூறல் முற்று முழுதாக இல்லாமல் போகும் அபாயம் உண்டு.

ட்ரம்பின் வரி விதிப்பு : ஆட்டம் காணப்போகும் இலங்கையின் முக்கிய தொழிற் துறைகள்

ட்ரம்பின் வரி விதிப்பு : ஆட்டம் காணப்போகும் இலங்கையின் முக்கிய தொழிற் துறைகள்

 

தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்

அதேவேளை ஐ.நா அலுவலகம் இந்த அரசாங்கத்திற்கு அங்கீகாரத்தை தேடிக்கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது என்ற பரவலான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உள்ளது.

ஐ.நாவைப் பலவீனப்படுத்தும் அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழரசுக்கட்சி | Itak Support To Govt S Efforts To Weakening The Un

அதேவேளை ஐ. நாவை பலவீனப்படுத்தும், செயற்பாட்டிலும், பொறுப்பு கூறல் செயற்பாட்டை முடக்கவும் இந்த அரசாங்கம் புதிய யுக்திகளை கையாளுகின்றது. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ, தமிழரசுக் கட்சியும் துணை போகின்றது. அதற்கு செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதத்தை கூறலாம்.

இது தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகம் என்பவற்றில் முறைப்பாடுகளை கையளிக்க உள்ளோம்.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 25 படுகாயம்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 25 படுகாயம்

புதிதாக எழுதவுள்ள கடிதம் 

இந்த கூட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அனைத்து கட்சிகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் இருந்து, அதன் முக்கியமான உள்ளடக்கங்களை பெற்று, தற்போதைய கால சூழலுக்கான கோரிக்கைகளையும் உள்ளடக்கி புதிய கடிதத்தை தயாரிக்கவுள்ளோம்.

ஐ.நாவைப் பலவீனப்படுத்தும் அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழரசுக்கட்சி | Itak Support To Govt S Efforts To Weakening The Un

அதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கை இவை தான் என கூறுவது மாத்திரமின்றி அதற்கு செயல் வடிவத்தை கொடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், மக்களை அணி திரட்டல் செயற்பாடுகளையும் செய்யவுள்ளோம்

புதிதாக நாம் எழுதவுள்ள கடிதம் வெளிவந்த பின்னர் அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை பார்த்த பின் , இது வரையில் எம்முடன் இணையாதவர்கள் இணைந்து கொள்ள முடியும்” என தெரிவித்தார். 

7 மாதங்களில் 68 துப்பாக்கிச்சூடுகள்! காரணம் இதுதான் - அம்பலப்படுத்தும் அமைச்சர் ஆனந்த விஜயபால 

7 மாதங்களில் 68 துப்பாக்கிச்சூடுகள்! காரணம் இதுதான் - அம்பலப்படுத்தும் அமைச்சர் ஆனந்த விஜயபால 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025