ஈரான் போருக்கு மத்தியில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய இரகசியங்கள்
அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (National Counterterrorism Center - NCTC) முன்னாள் இயக்குநரான ஜோ கென்ட் (Joe Kent) மீது FBI விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இரகசிய தகவல்களை (classified information) தவறாகப் பகிர்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் 18, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நான்கு நேரடி அறிவாளர்களை மேற்கோள் காட்டி, ஜோ கென்ட் ரகசிய ஆவணங்களை தவறான முறையில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனடி அச்சுறுத்தல் இல்லை
இந்த விசாரணை அவரது பதவி விலகலுக்கு மாதங்கள் முன்பே தொடங்கியது என கூறப்பட்டுள்ளது.

ஜோ கென்ட், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் NCTC இயக்குநராக பணியாற்றியவர். அவர் கடந்த மார்ச் 17 அன்று தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.
தனது பதவி விலகல் கடிதத்தில், இரான் போரை எதிர்த்து, "ஈரான் நமது நாட்டுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை" என்றும், ட்ரம்ப் இஸ்ரேல் அழுத்தத்தால் போரைத் தொடங்கியதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த இரகசிய தகவல் கசிவு விசாரணை அவரது பதவி விலகளுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், விசாரணை முன்கூட்டியே நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |