ட்ரம்பை கைவிட்ட நெருங்கிய கூட்டாளி! அமெரிக்க போர் விமானங்களுக்கு பேரிடி
அமெரிக்காவின் போர் விமானங்கள் சிசிலியில் உள்ள அமெரிக்க விமான தளத்தை பயன்படுத்துவதற்கு இத்தாலி தடை விதித்துள்ளது.
இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்கு, மத்திய கிழக்கு நோக்கி செல்லும் இராணுவ விமானங்கள் சிசிலியில் உள்ள சிகோனெல்லா விமான தளத்தின் வழியாகச் செல்ல முடியாது என்று அறிவித்துள்ளாார்.
அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் கிழக்கு சிசிலியில் உள்ள அந்த தளத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பயணத்தின் போது அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கு அதிர்ச்சி
அதன்போது, அமெரிக்கா முன்கூட்டியே அனுமதி கோராததாலும், ஒப்பந்தங்களின் படி இத்தாலி இராணுவ தலைமையுடன் ஆலோசனை நடத்தப்படாததாலும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

Image Credit: Wikipedia
குறித்த முடிவானது, ஐரோப்பாவில் ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தலைமையிலான கூட்டணி அரசால் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முடிவுக்கான காரணம்
சமீபத்தில் நீதித்துறை மாற்றம் தொடர்பான தேசிய கருத்துக்கணிப்பில் தோல்வியடைந்ததால் மெலோனியின் அரசியல் நிலை பலவீனமடைந்துள்ளது.

Image Credit: MSN
இந்நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியின் ஈரானுக்கு எதிரான போர், இத்தாலி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதால், இந்த முடிவு மூலம் மெலோனி அமெரிக்க நிர்வாகத்திலிருந்து ஒரு தூரத்தை பேண முயற்சிக்கிறார் எனக் கருதப்படுகிறது.
இதேவேளை, ஸ்பெயின் அரசும், ஈரானை குறிவைக்கும் தாக்குதல்களில் ஈடுபடும் அமெரிக்க விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்