இலங்கைக்கு வரவுள்ள ஹெலிகொப்டர்கள்
Ranil Wickremesinghe
Sri Lanka
Italy
By Sumithiran
மனித ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்களை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலி அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (25) அதிபர் செயலகத்தில் சந்தித்தபோது இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா இதனை வெளிப்படுத்தியதாக அதிபரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியதாகவும், கலாசார பரிமாற்றங்கள், சுற்றுலா மேம்பாடு, சாத்தியமான முதலீடுகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இந்த சவாலான காலங்களில் இலங்கைக்கு இத்தாலி எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்