இத்தாலியின் முன்னாள் பிரதமர் காலமானார்
இத்தாலியின் முன்னாள் பிரதமரும் அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ளவருமான சில்வியோ பெர்லஸ்கோனி, தனது 86 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
மிலானில் உள்ள ஷான் ரப்ஃபேலே மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிகவும் பிரபலமான செல்வந்த ஊடக தொழிலதிபரான சில்வியோ பெர்லஸ்கோனி முதல் முறையாக கடந்த 1994 ஆம் ஆண்டு இத்தாலியின் பிரதமராக பதவியேற்றிருந்தார்.
பிரதமரின் இறப்பு

அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நான்கு அரசாங்கங்களில் பிரதமராக அவர் செயற்பட்டிருந்தார்.
கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற தேர்தலில் இத்தாலியின் மேலவையான செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கீழ் கூட்டணியில் இணைந்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்றிருந்த சில்வியோ பெர்லஸ்கோனி, இரண்டு மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.