யாழ்ப்பாணத்தில் இன்று பரபரப்பு : துப்பாக்கி சூடு நடத்தி மடக்கி பிடிக்கப்பட்ட நபர்
யாழ்ப்பாணத்தில்(jaffna) இன்றையதினம் (06)அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி மடக்கிப்பிடித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
துரத்தி செல்லப்பட்ட உழவு இயந்திரம்
குறித்த உழவு இயந்திரம் குருநகர் பகுதியால் மணல் ஏற்றிச் சென்றவேளை, குருநகர் பகுதியில் உள்ள காவல்துறை காவலரணில் பணிபுரியும் காவல்துறையினர் அந்த உழவு இயந்திரத்தை துரத்திச் சென்றனர்.
பின்னர் இருபாலை பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தி உழவு இயந்திரத்தை மீட்டதுடன், உழவு இயந்திரத்தின் சாரதியையும்(28) கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உழவு இயந்திரத்துடன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |