நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி தேர்வு
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கம்ஷாஜினி குணரட்னம்னம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரட்னம் தொழிலாளர் கட்சியில் போட்டியிட்டார்.
21 ஒக்டோபர் 2015 அன்று குணரட்னம் ஒஸ்லோவின் துணை மேயராக நகர சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் அவர் 23 ஒக்டோபர் 2019 அன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று நடந்த தேர்தலில் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக கம்ஷாஜினி குணரட்னம் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நோர்வே எம்.பி.க்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Congratulations to @KamzyGunaratnam best wishes from Sri Lanka. https://t.co/IEaMIYUUt5
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) September 14, 2021