முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம்!
srilanka
covid19
corona
jaffna
army
By S P Thas
தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து யாழ்ப்பாண நகரம் முழுமையாக முடங்கியுள்ளது.
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றினை அடுத்து அரசாங்கம் நேற்று இரவு 11 மணியிலிருந்து எதிர்வரும் திங்கள் கிழமை வரை முழுமையான பயணத் தடையினை அறிவித்திருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணமும் முழுமையாக முடங்கியுள்ளது.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு சுகாதார பிரிவும், பாதுகாப்பு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.