இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீனவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இந்திய மீனவர்கள்!

india sri lanka jaffna fisherman kurunagar
By Kalaimathy Oct 05, 2021 08:01 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை மீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று இரவு 12 மணியளவில் தொழிலுக்குச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை காக்கைதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர்,  இலங்கை மீன்பிடி படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியுள்ளது.

அத்துடன் படகில் இருந்தவர்களை தாக்கி மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளார்கள்.   

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கையில், 

எமது கடலில் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக அத்துமீறிய இந்திய மீனவர்கள் எமது படகினை சேதப்படுத்தியதோடு மாத்திரமல்லாது படகில் இருந்த மீனவர்களின் உயிரைக் காப்பாற்றாது கடலுக்குள் தள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்த போதிலும் மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்யூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.இந்திய இழுவைப்படகுகளால் குருநகர் பகுதி மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்திய இழுவை படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்தொழில் அமைச்சு மட்டத்தில் முறையிட்டுள்ளோம். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகை நிறுத்தப்பட வேண்டும். இந்த பிரச்சனை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.   இந்திய மீனவர்களால் எமது மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இன்றைய சம்பவமானது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.   இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் இந்திய அரசினால் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.  ஏனென்றால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவது ஒருபுறம் அதேபோல மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது இன்னொருபுறமாக இருக்கின்றது.

இந்த நிலையில் எமது மீனவர்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது எனவே இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் இருக்கவேண்டும் எமது மீனவர்கள் பாதுகாப்பான முறையில் தொழில் செய்து கரை திரும்ப வேண்டும்.

வாழ்வாதாரத்திற்காகவே எமது மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்கின்றார்கள். இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாட்டினை இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து செய்வதால் எமது மீனவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.   அத்தோடு நடுக்கடலில் மீனவர்களை தாக்குவதோடு அவர்களின் உயிர்களை காப்பாற்றாது கடலில் தத்தளிக்கிற நிலை காணப்படுகின்றது.   

இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் இயற்கை அனர்த்தம் உள்ள நிலைமையில் தாக்கி சேதமாக்கப்பட்ட படகினை ஓட முடியாத நிலை காணப்பட்டிருந்தால் அந்த 3 மீனவர்களும் உயிரிழக்க கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கும் எனவே இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்குரிய நடவடிக்கையினை கடற்தொழில் அமைச்சும் அரசாங்கமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024