சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பகப் பொருட்கள் விற்பனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
யாழில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட முகாமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பகுதியில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம், உணவகம் மற்றும் பலசரக்கு கடை என்பவற்றின் முகாமையாளர்களுக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி பொதுச்சுகாதார பரிசோதகர் ம.பிரபாகரனினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24-04-2026) இது குறித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இதையடுத்து, வழக்கு விசாரணையின் போது நீதவான் இந்துஜா சிவலிங்கத்தினால் தலா பத்தாயிரம் ரூபா வீதம் முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை நாட்களில் பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், முகச்சவரம் செய்யாமை, முகக்கவசம், மேலங்கி மற்றும் கையுறை என்பவற்றை அணியாது உணவினைக் கையாண்டமை மற்றும் அழுக்கு படிந்த தரையில் உணவுகளை வைத்திருந்தமை ஆகிய சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் ஒன்றின் முகாமையாளருக்குப் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
சுகாதாரச் சீர்கேடு
இதே போன்ற சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகத்தின் முகாமையாளருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

அத்துடன் எலி எச்சங்கள் மற்றும் அழுக்கான இடங்களில் உணவுப் பொருட்களை வைத்திருந்தமை உறுதிசெய்யப்பட்ட பலசரக்கு கடை முகாமையாளருக்கும் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார விதிமீறல்களுடன் இயங்கிய மேலும் ஒரு பலசரக்கு கடைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த கடை முகாமையாளர் மன்றில் சமூகமளிக்காததை அடுத்து குறித்த வழக்கினை வரும் ஜூன் நான்காம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்