அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் மருத்துவர் ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவுனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக தமிழ்நாட்டு அரசியலில் வன்னியர் சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப் போராட்டங்களுக்காகவும் தீவிரமாக செயலாற்றி வந்த அவரது இந்த அறிவிப்பு, கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் ராமதாஸ்,அரசியலை இனி தனது மகனும் மருமகளும் பார்த்துக் கொள்வார்கள் என அறிவித்துள்ளார்.
கட்சியின் கட்டுப்பாடு அன்புமணியின் கீழ் வந்தது
இதன் மூலம், கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்து, தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் முழுமையான தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் அன்புமணி கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

இனி கட்சியின் முக்கிய முடிவுகள், தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணிக் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அன்புமணி ராமதாஸின் வழிகாட்டுதலின் கீழேயே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |