யாழ்.போதனா வைத்தியசாலை தீ விபத்தில் ரூபா 100 கோடி மருந்துப் பொருள்கள் நாசம்
Jaffna Teaching Hospital
Fire
Medicines
By Jaso
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூபா100 கோடி பெறுமதியான மருந்துப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் இந்த பாரிய தீவிபத்து இடம்பெற்றறமை குறிப்பிடத்தக்கது.
60 வீதம்பெறுமதியான மருந்துகள் அழிவு
இதன்போது, களஞ்சியத்தில் இருந்த 60 வீதம்பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அழிந்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் யாழ். போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளருமான மருத்துவர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |