இந்திய படையினரின் கொலை வெறிக்கு யாழ் வைத்தியசாலையில் பலியான அப்பாவிகள்
சிறலங்கா (Sri Lanka) இராணுவத்தினரை போல இந்திய (India) படையினரும் ஈழ மண்ணில் பல கொடூர தாக்குதலை மேற்கொண்டவர்கள் என்பது மறக்க முடியாத ஒரு உண்மை.
அவ்வாறு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மன்னிக்க மற்றும் மறக்க முடியாத கொடூரத்தின் உச்ச கட்ட தாக்குதல்தான் யாழ் வைத்தியசாலையில் இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி அந்த கொடூர தாக்குதல் இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 68 முதல் 70 பேர் வரையில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்டனர்.
இதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என அப்பாவி தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
- இந்த தாக்குதலின் பின்னணி,
- இந்த சம்பவத்தின் நேரடி சாட்சியங்களின் வாக்குமூலம்,
- இந்திய கடற்படையினரின் மற்றுமொரு பக்கம்,
- தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரம்,
என யாழ் வைத்தியாசாலையில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அவலங்களின் அத்தியாயங்கள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
