யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
யாழ். போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்ற படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
யாழ். போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்தது.
இந் நிலையில் ஏற்கனவே யாழ்ப்பாண வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன் மடம் பகுதியில் யாழ் மாநகர சபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை நிறுவுவதற்காக யாழ்ப்பாண மாநகர சபையுடன் ஒரு உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மருத்துவ கழிவுகள்
குறித்த உடன்படிக்கை செயற்படுத்த தயாராக இருந்த நிலையில் மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் கோம்பையின் மடல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்ட அனுமதிக்க முடியாது என தடைப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது பாரவூர்திகளில் ஏற்றப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
