புதிய உரிமையாளரின் கீழ் Jaffna Kings அணி
Cricket
Lanka Premier League
Jaffna Kings
By Dharu
லங்கா பிரீமியர் லீக்(LPL) தொடரின் ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையை Anchor Sports AB நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த நிறுவனம் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோர் இணை உரிமையாளர்களாக உள்ள ஸ்டொக்ஹோம்-ஐ தளமாகக் கொண்ட நிறுவனமாகும்.
ஜஃப்னா கிங்ஸ் அணியின் முன்னாள் உரிமையை வகித்த Sports Commune நிறுவனத்தின் இணை உரிமையாளரான இந்திய 19 வயதுக்குட்பட்ட முன்னாள் வீரர் மன்ஜோத் கல்ரா, ஆட்ட நிர்ணய மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முக்கிய நடவடிக்கை
இதனை அடுத்து அவரது உரிமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அதன் பின்னர் SLC மற்றும் LPL உரிமைகளை கொண்டுள்ள Innovation Production Group இன் கீழ் அணி தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி