கட்டுநாயக்காவில் சிக்கிய யாழ். வாள்வெட்டு குழுவின் முக்கிய நபர்: மீட்க்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கைக்குண்டு மற்றும் வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணை
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் இருந்து கை குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
