யாழில் மனதை உலுக்கிய சம்பவம்: இரட்டைக் குழந்தைகளுக்குப் பிறகு தாயும் பலி
யாழில் (Jaffna) அண்மையில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயாரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை - சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி (வயது 28) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அறுவை சிகிச்சை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் பிரசவித்தார்.
இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்தநிலையில் தாயார் தொடர்ச்சியாக மயக்கத்தில் இருந்ததால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
மரண விசாரணை
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் (26) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
சாட்சிகளை மானிப்பாய் காவல்துறையினர் நெறிப்படுத்தியுள்ளனர்.
மரணத்திற்க்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
