யாழ். மாநகர சபைக்கு விலை போகாத மேயர் - அடித்துக் கூறும் மணிவண்ணன்
யாழ். மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராக இருக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் (Viswalingam Manivannan) வலியுறுத்தினார்.
யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “யாழ். மாநகர சபை மேயர் பதவி என்பது மிக முக்கியமானது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் பொறுப்பு
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட முக்கியமானது. நாடாளுமன்ற உறுப்பினரை விட சிறப்பாக செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜதந்திரிகள் யாழ். மேயரை நிச்சயம் சந்திப்பார்கள். அவ்வாறானவர்களுடன் இராஜதந்திர ரீதியாக உரையாட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகள், அவர்களின் பிரச்சினைகள் என்பவற்றை எடுத்துக் கூற வேண்டும்.
எனவே மேயராக தமது கட்சி சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவர் சிறப்பானவராக இருக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்புடன் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் மேயரைத் தெரிவு செய்ய வேண்டும் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
