யாழ். தேசிய கல்வியற் கல்லூரி மாணவியின் மன உளைச்சல் சம்பவம்: கல்வி நிறுவனங்களில் பொறுப்புணர்வு எங்கே...
யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், விரிவுரையாளரின் முறையற்ற கருத்துக்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பின்னர் தவறான முடிவெடுத்த சம்பவம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு மாணவி கல்லூரி மன்றத்தின் பணிக்காக அனுமதி கடிதம் கோரி விரிவுரையாளரை அணுகிய சந்தர்ப்பத்தில், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கியமாக எழும் கேள்வி
இங்கு முக்கியமாக எழும் கேள்வி, ஒரு மாணவர் அல்லது மாணவி தனது கல்வி நிறுவனத்தில் உதவி அல்லது நிர்வாக அனுமதி கோரி அணுகும்போது, அவரை மரியாதையுடனும் பொறுப்புடனும் கையாள வேண்டியது நிறுவனத்தின் அடிப்படை கடமை அல்லவா? என்பதாகும்.
கல்வி நிறுவனங்களில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சாதாரணமான உரையாடலாக மட்டும் பார்க்கப்பட முடியாது.
குறிப்பாக மாணவர்களுடன் தொடர்புடைய சூழலில், ஒரு கடுமையான அல்லது அவமதிக்கும் வார்த்தைப் பிரயோகம் அவர்களின் மனநிலையிலும் கல்விச் சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இத்தகைய சம்பவங்கள் முன்வைக்கப்படும் போது கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பு குறித்து கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை அச்சமின்றி தெரிவிக்கக்கூடிய பாதுகாப்பான முறைப்பாட்டு நடைமுறை, முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவை சுயாதீனமாக விசாரணை, மாணவர்களின் மனநல பாதுகாப்புக்கு இவை அனைத்தும் பொறுப்புமிக்க விடயங்களாக பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |