இரண்டாவது நாளாகவும் யாழில் தொடர் போராட்டம்- ஸ்தலத்தில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறை!
police
jaffna
protest
point pedro
northern province
fisher man
vadamarachi
supparmadam
By Kalaimathy
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் மீனவர்களின் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
வீதியில் கூடாரங்களை அமைத்து படகுகள் மற்றும் வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. போராட்டம் இடம்பெறும் இடத்தில் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.