யாழில் சினிமா பாணியில் மடக்கி பிடிக்கப்பட்ட டிப்பர்...!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Law and Order
By Erimalai
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (05-02-2026) வடமராட்சி பருத்தித்துறை காவல் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் கிராமக்கோட்டு சந்தியிலிருந்து மணல்காடு வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று குறித்த டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நடவடிக்கையைக் காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியையும் டிப்பர் வாகனத்தையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகப் பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி