சாதனை படைத்த ஈழத்தமிழச்சி!! வறுமையுடன் போராடி இன்று உலகம் பேச உயர்ந்து நிற்கின்றாள் (காணொளி)
யாழ்ப்பாணம் , சுழிபுரம் விக்ரோறிய கல்லூரியின் மாணவி கிறிஸ்டிகா இலங்கை தேசிய கிரிக்கெட் சபையினால் 19 வயதுக்கு உட்பட்ட தேசிய மகளீர் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்வதற்கான குழாமில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வறுமை மற்றும் போர்கால சூழல் என்ற சவால்களைத் தாண்டி இன்றும் பல மாணவர்கள் தங்களிற்கான வெற்றிச்சாதனைகளை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கினறனர்.
யாழ்ப்பாணம் - சுழிபுரமம் டிஎன்ற பிரதேசத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாண்டவெட்டை என்ற பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி கிரிஸ்டிகா செல்வராசா இன்று ஒரு சாதனை மாணவி.
தரம் ஆறில் சுழிபுரம் விக்ரோறியா இணைந்த இவர்.. தனது 11ஆவது வயது தொடக்கம் விளையாட்டில் அதீத ஈடுபாட்டினைக் கொண்டிருந்தார். ஓட்டம், உரம் பாய்தர் போன் விளையாட்டில் தனது ஆர்வத்தை காட்டியதுடன், கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பற்றுதலை ஏற்படுத்தி சிறுவயது தொடக்கம் மென்பந்து துறையில் தனது கவத்தை செலுத்தியுள்ளார்.
சிறிய குடும்பம், தந்தையர் வீட்டில் வைத்து துவிச்சக்கர வண்டிகள் திருத்தும் வேலை செய்து வருகின்றார், தாயார் ஒரு குடும்பத் தலைவி.
தனது கிரிக்கெட் துறைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை, வறுமையின் நிமிர்த்தம் அதனை நிவர்த்தி செய்ய முடியாத நிலை, ஆனாலும் கிரிக்கெட்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவரிடம் நிறையவே உள்ளது.
பல சவால்களை தாண்டி குடும்பத்தின் ஒத்துழைப்பு, பாடசாலையில் கொடுக்கப்பட்ட ஊக்கம் என அவரிக் ஆர்வத்தினை தூண்டியது.
சிறு சிறு உதவிகள் கிடைத்த போதிலும் தனது முழுமையான பயிற்ச்சிகளில் ஈடும் அளவிற்கான வசதிகள் கிடைத்திருக்கவில்லை.
30 தொடக்கம் 40 பேர் வரையாக உள்ளடக்கப்படும் குழாமில் இவர் இடம்பிடித்தள்ளார். தொடர்ந்து வழங்கப்பட்டும் பயிற்சி மற்றும் தேர்வுகளின் பின்னர் 15 பேர் கொண்ட குழாமில் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் இலங்கை தேசிய மகளிர் அணியில் விளையாடுவதற்கு தகுதி பெறுவார்.
அது வரையில் தற்போது அவர் பயிற்சிக்குழாமில் இடம்பிடித்துள்ளனமை என்பது பெருமைககுரிய விடயமே. இந்த விடயம் தொடர்பில் கிரிஸ்டிகா தெரிவித்த கருத்துக்களை காணொளியில் பார்க்கலாம்,