நினைவுத்தூபி இரவோடு இரவாக அழிக்கப்பட்டது ஸ்ரீலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பே!
இலங்கை தமிழர்களின் அங்கிகாரம் பெற்ற ஒரு இடமாக காணப்படுவது யாழ் பல்கலைகழகமாகும். தமிழர்களின் எண்ணத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துகின்ற இடமாகவே யாழ்பாண பல்கலைகழகம் இருந்து வருகின்றது.
இப்படியான சந்தர்பத்தில் யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அரசாங்கத்தின் மேலிடத்தின் உத்தரவுக்கு அமைய யாழ்.பல்கலைகழகத்தின் நிர்வாகத்தினர் பல்கலைகழகத்திக்கு முன்னால் இராணுவத்தினர் பொலிஸாரை குவித்து இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை அழித்திருக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடு இலங்கை அரசின் கட்டமைக்கப்பட இன அழிப்பை எடுத்துகாட்டுவதாகவே நாம் பார்கவேண்டும் என யாழ் பல்கலைகழகத்தின் முன்னாள் சட்டத்துறை மாணவனும் யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் தமிழரசு கட்சியின் உபதலைவருமான சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு இனத்தின் நினைவுகளை சுமத்தல் மற்றும் அடையாளப்படுத்தல் அதனை அடுத்த சந்ததியினருக்கு கடத்துதல் என்பது ஒரு இனத்தின் இருப்பை தக்கவைப்பதற்கான நடவடிக்கை ஆகும்.
இவ்வாறு முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபியானது அழிக்கப்பட்டது ஒரு ஜனநாயக விரோத செயலாக காணப்படுவதோடு தமிழர்களின் கட்டமைப்பை சிதைப்பதற்கான செயற்பாடாகவே பார்க வேண்டியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.