விரிவுரைகளை துரிதப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலை மாணவர்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட இசைத்துறையில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கவேண்டிய மூன்றாம் மற்றும் இரண்டாம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டம்
மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு வருவதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதோடு விரிவுரையாளர்கள் பணியாளர்கள் உட்செல்லமுடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இசைத் துறை மாணவர்களது போராட்டத்தினால் ஏனைய துறை மாணவர்களின் விரிவுரைகளும் பாதிக்கப்படுவதாக விரிவுரையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் தமது விரிவுரைகளை துரிதப்படுத்தக்கோரி ஏனைய மாணவர்களின் விரிவுரைகளை நிறுத்தி போராட்டம் செய்வதை ஏற்கமுடியாது என ஏனைய துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
