பாதசாரி கடவையில் மோதிய மோட்டார் சைக்கிள்: வயோதிபப் பெண் பலி
யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23-04-2026) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஊர்க்காவற்றுறை - புளியங்கூடல் பகுதியைச் சேர்ந்த தவரத்தினம் நவமணி (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 18ஆம் திகதி குறித்த பெண்ணும் அவரது மகனும் வல்வெட்டித்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின்னர் 22ஆம் திகதி அங்கிருந்து மீண்டும் தமது வீடு நோக்கி வந்துள்ளனர்.
இதன்போது வல்லைவெளி ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று இருவரும் வழிபட்டுவிட்டு, பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த நிலையில், நெல்லியடி பகுதியிலிருந்து மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது.

இதையடுத்து அவர், உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |