யாழில் காவல்துறையினர் செய்த சம்பவம்: தீயாய் பரவிய காணொளி - வெளியானது காரணம்!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Dilakshan Mar 28, 2025 11:16 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்று வீடொன்றின் கதவை காவல்துறையினர் எட்டி உதைப்பது போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, நெல்லியடி பகுதியில் ஒரு நபர் அங்கீகரிக்கப்படாத இறைச்சி கூடத்தை நடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, நெல்லியடி காவல்துறை திங்கட்கிழமை (மார்ச் 24) சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றபோது, வீட்டின் பின்னால் அமைக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத இறைச்சி கூடத்தையும், ஒரு நபர் கொல்லப்பட்ட கன்றுக்குட்டியை வெட்டுவதையும் அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

நாட்டில் ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டில் ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்

கைது முயற்சி

அதன்போது, சந்தேக நபரைக் கைது செய்ய அதிகாரிகள் முயன்றபோது, ​​அவர் வீட்டிற்குள் ஓடி ஒரு அறைக்குள் தன்னைப் பூட்டிக் கொண்டதால் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் வெளியே வர மறுத்துள்ளார்.

யாழில் காவல்துறையினர் செய்த சம்பவம்: தீயாய் பரவிய காணொளி - வெளியானது காரணம்! | Jaffna Viral Video Police Issue Clarification

சந்தேக நபர் அறையை விட்டு வெளியே வருவதற்கு மறுத்ததால், ஒரு காவல்துறை அதிகாரி, அவரைக் கைது செய்ய கதவை உதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, அண்டை வீட்டாராக அடையாளம் காணப்பட்ட பெண்கள் உட்பட ஒரு குழு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், நெல்லியடி காவல்துறை பொறுப்பதிகாரி அந்த இடத்திற்கு விரைந்துள்ளார்.

காவல்துறை விசாரணை

அதனை தொடர்ந்து, அங்கீகரிக்கப்படாத இறைச்சிக் கூடத்தை நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 44 வயது நபர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்றை தெரிவித்துள்ளது.

யாழில் காவல்துறையினர் செய்த சம்பவம்: தீயாய் பரவிய காணொளி - வெளியானது காரணம்! | Jaffna Viral Video Police Issue Clarification

இதேவேளை, கைது செய்யப்பட்டபோது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மற்றவர்களைக் கைது செய்ய நெல்லியடி காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாவும் அதே நேரத்தில் வழக்கு ஏப்ரல் 04, 2025 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025