யாழில் பெண் ஒருவர் செய்த காரியம்! காவல்துறையினர் முன்னெடுத்த நடவடிக்கை
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
யாழ்ப்பாணத்தில்(Jaffna) நீண்ட காலமாக சட்டத்துக்கு புறம்பாக சாராயம் விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(10.02.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கைதான பெண்ணிடமிருந்து 27 கால் போத்தல்கள் சாராயம் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்