சிறை அதிகாரியின் சட்டவிரோத செயல் : கையும் மெய்யுமாக பிடித்த காவல்துறை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Prisons in Sri Lanka
Prison
By Sumithiran
போதைப்பொருள் கடத்திய சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இன்று (08) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளை கொண்டு செல்லும்போது நிவித்திகல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில்
சந்தேக நபர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் பணிபுரியும் சிறை அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கபில பிரேமதாசவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர் இரத்தினபுரி கலவான பிரதான வீதியில் கட்னிவத்தையில் காவல்துறை வீதித்தடையை பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
சில காலமாக ஐஸ் போதைப்பொருளை கடத்தி
சந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையாற்றும் போது சில காலமாக ஐஸ் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
