இலங்கை நிலைமை தொடர்பில் ருவாண்டாவில் முக்கிய பேச்சு
ருவாண்டாவில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வியாழன் அன்று ருவாண்டாவில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்து பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, இந்தியாவின் ஆதரவு குறித்து கலந்துரையாடியுள்ளார்.
ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் பக்கவாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கோட்டாபயவுடனான சந்திப்பு
இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தலைமையிலான நான்கு பேர் கொண்ட தூதுக்குழு, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்டத் தலைமையை கொழும்பில் சந்தித்து, முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீரிஸுடனான ஜெய்சங்கரின் சந்திப்பு நடைபெற்றது.
A neighbors’ meeting with Prof. G.L. Peiris, FM of Sri Lanka on the margins of the Commonwealth Summit.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 23, 2022
Talked about Commonwealth issues as well as India's support for Sri Lanka at this time. pic.twitter.com/PGsqmGMPu8
“கொமன்வெல்த் மாநாட்டின் விளிம்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் அண்டை நாடுகளின் சந்திப்பு. இந்த நேரத்தில் கொமன்வெல்த் விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவைப் பற்றி பேசினேன், ”என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
2022 ஜூன் 21 முதல் 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொள்கிறார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட செய்திக்குறிப்பு
கொழும்பு சென்ற இந்தியக் குழுவினர் முதலில் அரச தலைவர் ராஜபக்சவை சந்தித்தனர். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் தற்போதைய ஆதரவு குறித்து இரு தரப்பினரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
தூதுக்குழுவினர் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்ததுடன், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார மீட்சியை அடைவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக கலந்துரையாடினர்.
இந்தச் சூழலில், உள்கட்டமைப்பு, இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத் தொடர்புகளை ஆழமாக்குதல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-இலங்கை முதலீட்டு பங்காளித்துவத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.
இந்த சந்திப்புகளின் போது, இலங்கை மக்களுக்கு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகள் பிரதமர் நரேந்திர மோடியின். 'அண்டை நாடுகளுக்கு முதலில்' கொள்கை மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) பார்வையால் வழிநடத்தப்பட்டதாக இந்திய தூதுக்குழு வலியுறுத்தியது.