விஜய்யின் ஜன நாயகன் தாமதத்தால் தமிழக திரையரங்குகளுக்கு ஏற்பட்ட100 கோடி இழப்பு
எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் திகதி திரைக்கு வரவிருந்தது, ஆனால் தணிக்கை தாமதம் காரணமாக காலவரையின்றி படம் ஒத்திவைக்கப்பட்டது
எச் வினோத் இயக்கிய நடிகர்-அரசியல்வாதி, விஜய்யின் இறுதிப் படமான ஜன நாயகன், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தில் (CBFC) சிக்கித் தவிக்கிறது,மேலும் மூன்று நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகும் இன்னும் தீர்வு காணப்படவில்லை.
திரையரங்குகளுக்கு ஏற்பட்ட100 கோடி இழப்பு
இதற்கிடையே, தயாரிப்பாளர் KVN புரொடக்சன்ஸ் மட்டும் இதனால் பாதிக்கப்படவில்லை; தாமதத்தால் தமிழக திரையரங்குகள் ₹100 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து வருவதாக வர்த்தக ஆய்வாளர் ஒருவர் இந்தியா டுடேவிடம் தெரிவித்தார்.

அனுமதி அளித்தாலும் மற்றுமொரு சிக்கல்
நீதிமன்றம் படத்தை வெளியிட அனுமதி அளித்தாலும், மத்திய திரைப்பட வாரியம் அனுமதி அளித்தாலும், தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அட்டவணை அறிவிப்பு ஒரு பெரிய தடையாக இருக்கலாம்.

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கொம்பனி மற்றும் சூரியாவின் கருப்பு போன்ற அடுத்த வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள படங்களும் இந்த நிச்சயமற்ற தன்மையால் இழுபறியில் உள்ளன.
இதேவேளை ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளதால் திரையரங்குகளில் ரசிகர்களின் எண்ணிக்கை யும் குறைவடையும்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |