சீனாவின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்கை விமர்சித்த ஜப்பான்
சீனாவின் இராணுவ விரிவாக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததைக் ஜப்பான் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர், தனது நாடு புதிய இராணுவவாதத்தில் ஈடுபட்டு வருவதாக பெய்ஜிங் கூறிய குற்றச்சாட்டை மறுத்த நிலையில் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டின் இறுதி நாளில் பேசிய ஷின்ஜிரோ கொய்சுமி, உண்மையில் சீனாவும் அதன் மாபெரும் ஆயுதக் கிடங்கும்தான் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான கவலையை அளிப்பதாக வாதிட்டுள்ளார்.
இராணுவமயமாக்கப்பட்ட ஜப்பான்
பிரதமர் சானே டகாயிச்சியின் கீழ் ஜப்பான் தனது இராணுவத்தை பலப்படுத்தி வருவதை சீனா தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, டோக்கியோவிலிருந்து இதுவரை வெளிவந்த கருத்துக்களிலேயே அவரது கருத்துக்கள் மிகவும் கூர்மையானவையாக இருந்தன எனவும் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் சீனா மீது படையெடுத்ததன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக பதட்டங்கள் நிலவி வருகின்றன.
கடந்த வாரம், சிங்கப்பூர் உச்சிமாநாடு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின், மீண்டும் இராணுவமயமாக்கப்பட்ட ஜப்பான் எனும் சாம்பல் நிறக் காண்டாமிருகம் வேகம் பெற்று வருகிறது என எச்சரித்ததோடு, ஜப்பானின் புதிய இராணுவவாதத்தைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுமாறு"சர்வதேச சமூகத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
நிதி ஒதுக்கீடு
ஜப்பான் தனது பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை சீராக அதிகரித்து, தொடர்ந்து 12 ஆண்டுகளாக செலவினங்களில் சாதனை படைத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
டிசம்பரில் அதன் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய நிதி ஒதுக்கீடு, 9 ட்ரில்லியன் யென் ($57 பில்லியன், £42 பில்லியன்) க்கும் அதிகமாக உள்ளது.
இது, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ராணுவத்திற்காக செலவிடும் இலக்கை அடைய அந்நாட்டை மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்கிறது.
ஜப்பானிய அரசாங்கம், தாங்கள் போரை நாடவில்லை என்றும், தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த மட்டுமே விரும்புகிறது என அவர் விவரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |