இலங்கைக்கு கை கொடுத்த மேலுமொரு நாடு! மீளுமா இலங்கை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக யுனிசெப் மற்றும் உலக உணவு திட்டம் ஊடாக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 03 மில்லியன் பெறுமதியான அவசர மருந்து மற்றும் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது.
யுனிசெப் நிறுவனத்தினூடாக 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான மருந்துகளை வாங்குவதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கவுள்ளது, அவர்களில் 53,000 கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஏறக்குறைய 1,22,000 குழந்தைகள் உடனடித் தேவையுள்ளவர்களாக உள்ளனர்.
சுகாதார அமைச்சுடன் இணைந்து இலங்கை முழுவதுமுள்ள சுகாதார நிலையங்க ளுக்கு இந்த மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளன. இலங்கைக்கான ஜப்பானின் இடைக்கால பொறுப்பாளர் கட்சுகி கோட்டாரோ, "இலங்கை மக்க ளுக்கு மிக அவசரமாகத் தேவைப் படும் 25 வகையான மருந்துகளை வாங்குவதற்கு ஜப்பான் 1.5 மில் லியன் அமெரிக்க டொலர் அவசர உதவியை வழங்குவது எங்களுக்கு பெருமையாகும்.
UNICEF மூலம் அடுத்த இரண்டு மாதங்களில், பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சாத் தியமுள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தி யாவசிய உயிர்காக்கும் மருத்துவ சேவைகளை வழங்க உதவுமென்று நாம் நம்புகின்றோம்.
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கு உதவவதற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (600 மில்லியன் ரூபா) வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் நேற்று அறிவித்தது.
இந்த நிதி ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தினால் (WFP) குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு உதவி வழங்குவதற்கு பயன்படுத்தப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
