இலங்கையின் கடற்றொழில் துறையின் நவீன திட்டத்துக்கு ஜப்பான் ஆதரவு
இலங்கையின் கடற்றொழில் துறை நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் தயாராக உள்ளதாக ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio Isomata) மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பின் போது, ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் திட்டங்கள் மற்றும் அவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
மேலும், கடற்றொழில் அமைச்சின் எதிர்கால இலக்குகள் மற்றும் இலங்கையின் கடல் வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், ஜப்பான் கடற்றொழில் துறையில் பெற்றுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சரின் விளக்கங்களை கவனமாகக் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர், இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்கும் புதிய புத்தாக்கத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான முழுமையான தொழில்நுட்ப மற்றும் ஒத்துழைப்பு ஆதரவுகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |