முன்னாள் கடற்படைத் தளபதிக்கு வழங்கப்பட்ட நியமனத்தை இடை நிறுத்திய ரணில்! பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு
முன்னாள் கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகேவுக்கு வழங்கப்பட்ட ஜப்பானியத் தூதுவர் நியமனத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க இடைநிறுத்தியுள்ளார்.
கோட்டாபய அதிபராக இருந்தபோது முன்னாள் கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே, அரசியல் நியமனம் வழியாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜப்பானிய தூதுவராக அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனம் பெற்றிருந்த சஞ்சீவ் குணசேகர என்பவர், நாட்டின் அரசியல் தளம்பநிலை மற்றும் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகல் போன்ற காரணிகளால் அச்சம் கொண்டு தனது ஜப்பானிய தூதுவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.
ரணிலின் நியமனம்
அதனையடுத்து, குறித்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த முன்னாள் கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டு, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் அவருக்குப் பதிலாக அருணி விஜேவர்த்தன வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போதைக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜப்பானிய தூதுவராக சிரேஷ்ட ராஜதந்திரி ரொட்னி பெரேரா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.