ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரிகளை தப்பியோட விட்ட காவல்துறையினர்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order Gun Shooting
By Independent Writer Feb 19, 2026 06:25 AM GMT
Independent Writer

Independent Writer

in குற்றம்
Report

கொழும்பு, ஜின்துபிட்டியிலுள்ள சலூன் ஒன்றில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய கொலையாளிகள் தப்பியோடும் போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 14ஆம் திகதி சலூனுக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

இதன் போது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பிடிக்காமல் மறைந்து நின்ற குற்றச்சாட்டில் ஆட்டுப்பட்டி தெரு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை சார்ஜன்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

12 உயிர்களைக் காக்கச் சொல்லும் பொன்சேகா - அநுரவுக்கு பறந்த கடிதம்

12 உயிர்களைக் காக்கச் சொல்லும் பொன்சேகா - அநுரவுக்கு பறந்த கடிதம்

கைது செய்ய முயற்சி செய்யவில்லை

அன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த காவல்துறை அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஸ்கூட்டரில் தப்பிச் சென்ற இருவரை நேருக்கு நேர் பார்த்துள்ளனர்.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரிகளை தப்பியோட விட்ட காவல்துறையினர் | Jinthupitiya Shooting Police Watch Gunmen

எனினும் தப்பியோடியவர்களை அதிகாரிகள் தடுக்கவோ அல்லது கைது செய்யவோ முயற்சி செய்யவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, துப்பாக்கி ஏந்தியிருந்த காவல்துறை சார்ஜன்ட், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றபோது அவர்களை நோக்கிச் செல்லாமல், தனது ஜீப் வண்டியின் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டத்தரணி கொலை - NPP அரசிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்

அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டத்தரணி கொலை - NPP அரசிற்கு எதிராக வலுக்கும் கண்டனம்

பணி இடைநீக்கம்

மேலும் டி-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த கான்ஸ்டபிள், அதை இயக்க முயற்சிப்பது போல நடிப்பதும் சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரிகளை தப்பியோட விட்ட காவல்துறையினர் | Jinthupitiya Shooting Police Watch Gunmen

கடமையை உரிய முறையில் செய்யத் தவறிய 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவ்துறை தலைமையகம் இவர்களைப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பி சென்றபோது, அவர்களைப் பிடிக்காமல் இருந்ததற்கு பின்னால் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என ஆராய காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...




ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026