வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்
ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடு இல்லாததால் ஈர்க்கப்பட்ட வளர்ந்த நாடுகள், இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைத் திறந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு சந்தை
இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JAICA) இணைந்து ஏற்பாடு செய்த ஜப்பானிய வேலைவாய்ப்பு சந்தை, ஊவா மாகாண புலம்பெயர்ந்தோர் வள மையத்தில் நடைபெற்றது.
இங்கு ஜப்பானில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான வழி குறித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கையர்கள் விண்ணப்பிக்கக்கூடிய ஜப்பானிய வேலைத் துறைகள் மற்றும் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜப்பானிய மொழி
கூட்டத்தில் உரையாற்றிய பணியகத் தலைவர் கோசல விக்ரமசிங்க, ஜப்பானிய மொழியைப் படித்து இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானிய மொழியின் தொடர்ச்சியான படிப்பு இல்லாததால், இலங்கையர்கள் அந்த நாட்டில் கிடைக்கும் வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
