இஸ்ரேலில் வேலை வாய்ப்பு : பெண்ணின் பாரிய பணமோசடி அம்பலம்
இஸ்ரேலில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 5 கோடி ரூபாவை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 53 பேர் செய்த முறைப்பாடுகளை அடுத்து தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர்களிடம் இருந்து மாத்திரம்
குறித்த முறைப்பாட்டாளர்களிடம் இருந்து மாத்திரம் நான்கு கோடியே அறுபத்து நாலாயிரத்து முன்னூறு ரூபாவை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

தாதியாக வேடமணிந்து
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாதியாக வேடமணிந்து ஒருவரிடம் இருந்து ஐந்து, பத்து, பதினைந்து இலட்சம் எனப் பலதரப்பட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த மோசடியை செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாடுகள் உறுதிப்படுத்துவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வரகாபொல பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர்.இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 19 மணி நேரம் முன்