ஜோசப் ஸ்டாலின் கைது (காணொலி)
Sri Lanka Police
Galle Face Protest
By Sumithiran
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கோட்டகோகம செயற்பாட்டாளர் மகாநாம தேரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
