சசி புண்ணியமூர்த்தி ஊடகவியலாளர் இல்லை - பிள்ளையான் அதிரடி!

Batticaloa Pillayan Sri Lanka
By pavan Aug 31, 2023 11:04 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி ஊடகவியலாளர் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம் பெற்ற ம மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு குறிப்பாக சசி புண்ணியமூர்த்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு தென்னிலங்கையில் இருந்து வரும் பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க, அமைச்சர்கள் யார் வந்தாலும் துணிகரமாக கேள்வி கேட்கும் சசி புண்ணியமூர்த்தியை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்குடன் இராஜாங்க அமைச்சர் சிவனேதுரை சந்திரகாந்தன் நடத்திய நாடகம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அனுமதி மறுக்கப்பட்ட சசி புண்ணியமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்து இருந்தார்கள்.

சசி புண்ணியமூர்த்தி ஊடகவியலாளர் இல்லை - பிள்ளையான் அதிரடி! | Journalists Are Protesting Batticaloa

ஊடகவியலாளர்கள் வெளியில் நிற்பதை கண்டு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி குழு தலைவர், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஊடகவியலாளர்கள் வெளியில் நிற்பதை கண்டு அவர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களுடைய குறை நிறைகளை கேட்டு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு சென்று இருந்தார்கள்.

குறித்த ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரிடம் கேள்வி எழுப்பியபோது சசி புண்ணியமூர்த்தி என்பவர் ஒரு ஊடகவியலாளர் இல்லை அதன் காரணமாகவே அவரை நாங்கள் அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தகவல் திணைக்கிழத்தால் வழங்கப்பட்ட 20203 2024 காண ஊடக அடையாள அட்டை இருப்பவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படலாம் என்று மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி தெரிவித்திருந்த நிலையில் 2021 2022 தகவல் திணைக்கள அடையாள அட்டை உள்ளவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் கூட்டத்துக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட சசி புண்ணியமூர்த்தி மட்டும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வரக்கூடாது என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

13-வது திருத்தச் சட்டம் 

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் சசி புண்ணியமூர்த்தி கேள்வி எழுப்பிய போது கடந்த மாதம் நடந்த கூட்டத் தொடர் ஒன்றில் கிழக்கு மாகாண ஆளுநரை மிஸ்டர் கவர்னர் என்று கூப்பிட்டதாகவும் இலங்கையின் பிரதம மந்திரியிடம் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பாகவும் 13-வது திருத்தச் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியதன் காரணமாக சசி புண்ணியமூர்த்தி அவர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதிக்க கூடாது என்ற முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சசி புண்ணியமூர்த்தி ஊடகவியலாளர் இல்லை - பிள்ளையான் அதிரடி! | Journalists Are Protesting Batticaloa

எது இவ்வாறாக இருந்தாலும் தகவல் திணைக்கள அடையாள அட்டை இருப்பதோ இல்லையோ என்பதை பார்க்க வேண்டிய பொறுப்பு இலங்கை தகவல் திணைக்களத்துக்குள்ளது ஆனால் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைகள் அதிகாரி 10 வருடமாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டும் பல ஊடகங்களுக்கும் செய்தி அனுப்பி கொண்டு வருகின்ற செயற்பாடு இந்த ஊடகவியலாளர்கள் அனுமதிக்க படாதவைக்கான காரணமாக இருக்கின்றது.

சந்திரகாந்தனின் முட்டாள்தனம்


ஆகவே 2021 ஆம் ஆண்டு தகவல் திணைக்கள அடையாள அட்டை இருக்கின்றவர்களுக்கு அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்க முடியுமாக இருந்தால் சசி புண்ணியமூர்த்திக்கு அனுமதி வழங்காததிற்கான காரணம் என்ன ? உரிமை மறுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக இருக்கும் ஊடகவியலாளர்களை அடக்க நினைக்கும் இராஜாங்க அமைச்ச சிவனேசதுரை சந்திர காந்தனுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்களத்திற்கும் எதிராக எதிர்வரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 10 வருடத்திற்கு மேலாக ஊடகவியலாளர்களை பிளவு படுத்திக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கலை அதிகாரி உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் சசி புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சிவனே சித்திரை சந்திரகாந்தனின் அடிமுட்டாள் தனத்திற்கும் ஒரு உலகறிந்த ஊடகவியலாளரை ஊடகவியலாளர் இல்லை என்ற சொல்லுகின்ற கருத்துக்கும் சர்வதேச ரீதியில் வன்மையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026