"நீதிக்கான நீள்பயணம்"யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு
Missing Persons
Jaffna
By Jaso
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற சர்வதேச மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாநாட்டில் சர்வதேச ராஜதந்திரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மதத்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு? 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்