குருக்கள் மடத்திலுள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட்ட உயர் அதிகாரிகள்
குருக்கள் மடத்திலுள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்று (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள் மடத்தில் கொலை செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை
இது குறித்த வழக்கு விசாரணை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த இடத்திற்கு நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் தொல்பொருள் திணக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், காவல்துறையினர், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் காவல்துறையினர், உதவிப் காவல்துறை அத்தியட்சகர் மற்றும் உள்ளிட்ட பலரும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
கடற்கரைப் பகுதி
இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உரிய இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாசிகுடி நீதவான் நீதிமன்றம உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்றயதினம் (11) நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு காவல்துறையினருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |












