கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இலங்கை - இந்திய பக்தர்களின் உறவுப்பாலமாக உள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று (27) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நெடுந்தீவு பங்குதந்தை பத்தி நாதன் கலந்துகொண்டு தேவாலயத்தின் எதிரே உள்ள கொடிமரத்தில் அந்தோணியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியினை ஏற்றி வைத்து திருவிழாவை தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம் தலைமையில் பங்குத்தந்தைகள் பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலந்துகொண்டுள்ள பக்தர்கள்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்காக இம்முறை 6000க்கும் மேற்பட்ட இலங்கை பக்த்தர்களும் இந்தியாவிலிருந்து 3,992 பக்த்தர்களும் சென்றடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நேற்றைய தினம் நெடுந்தீவிருந்து 450 பக்த்தர்களும், ஊர்காவற்றுறையிலிருந்து 434 பக்தர்களும் சென்றடைந்த நிலையில், குறிகட்டுவான் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து மேலும் 500 பக்தர்கள் சென்றடைந்ததுடன், நீர்கொழும்பு மற்றும் மன்னார் உட்பட ஏனைய மாவட்டங்களிலிருந்து நேரடியாகவும் பக்தர்கள் சென்றடைந்துள்ளார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
செய்திகள் - பு.கஜிந்தன், த.பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |